தா என்று கேட்காமலே கடவுள் நமக்கு கொடுத்த வரம் தாவரம். இந்த தாவரத்தில்
தான் எத்தனை வகைகள்? உணவுக்கு, மருந்துக்கு, அழகுக்கு, அழிவிற்கு என
அனைத்திற்கும் உலகத்தில் மனிதன் தாவரங்களைச் சார்ந்து தான் வாழ்ந்தாக
வேண்டும். மனிதனின் உடல் எடையில் 70 % தண்ணீர் தான் நிறைந்துள்ளது, எனவே
அவன் தன் வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழ
நஞ்சற்ற எளிய பழங்கள் காய்கறிகள் , கீரைகள், சிறு தானியங்கள் இவற்றை உணவாக பெற வேண்டும் .
விவசாய விளைநிலங்கள் வீட்டுமனையிடமாக அறுவடையாகிக் கொண்டு வருகிறது. தேர்ந்த விவசாயியின் நிலம் விவசாய அக்கறையற்ற தொழிலதிபரின் கைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களில் இரசாயனம் அதிகமாக உபயோகிப்பதால் விளைச்சல் தராமல் மலட்டு நிலங்களாகி வருகிறது. ஏற்கனவே விளைச்சல் தராத களிமண் நிலங்கள் 7 பகுதிகளாக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைக்கும் திறன் குறைந்த நிலம் 24 இலட்சம் ஹெக்டார் கரிசல் மண்வகைகளில் சோடியம் அயனி அதிகம் இருப்பதால் அடிமண் இறுகி காணப்படும் நிலங்கள் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 இலட்சம் ஹெக்டார் . செம்மண் நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய கூழ்ம ஆக்சைடுகளால் மண் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேல்மண் இறுகிவிடும் நிலையில் உள்ள பரப்பளவு ஏறத்தாழ 4 இலட்சம் ஹெக்டார் . நெல் சாகுபடியை தொடர்ந்து செய்வதால் மண் தனது திடத் தன்மையை இழந்து வரும் நிலம் ஏறத்தாழ 25,000 ஹெக்டார் . அடிமண்ணில் பாறைகள் தென்பட்டு , மேல்மண் ஆழமற்ற நிலங்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஹெக்டார் .
பருவம் மாறி மலைபெய்தல், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , இப்படி இயற்கையின் கணக்கை ஈடு செய்து வளர்ச்சி காணாது நவீன கம்ப்யூட்டர் யூகங்களாக மாறிவரும் சூழ்நிலை , உழைக்காமல் உடனடியாக பணம் சம்பாதித்து பந்தா வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் , சிந்தனையும் அளவுக்கு மீறி விளைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலை மாற்றி இனி வரவிருக்கும் நூற்றாண்டில் அவரவர் வீட்டில் இருக்கின்ற இடத்திலேயே , சந்து , பொந்து , மொட்டை மாடியில் காய்கறிகள் , கீரைகள் , மற்றும் அனைத்து உணவு , மருத்துவச்செடிகளை வளர்த்து பலனை எடுக்கத் தெரிந்தவரே நிறைவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தகுதியுடைவரா வார். எனவே ஒவ்வொருவரும் தம் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் ,கீரைகள் , பழங்களை , மருத்துவச்செடிகளை வளர்க்கக் கற்றுக் கொள்வோம் .
நஞ்சற்ற எளிய பழங்கள் காய்கறிகள் , கீரைகள், சிறு தானியங்கள் இவற்றை உணவாக பெற வேண்டும் .
விவசாய விளைநிலங்கள் வீட்டுமனையிடமாக அறுவடையாகிக் கொண்டு வருகிறது. தேர்ந்த விவசாயியின் நிலம் விவசாய அக்கறையற்ற தொழிலதிபரின் கைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களில் இரசாயனம் அதிகமாக உபயோகிப்பதால் விளைச்சல் தராமல் மலட்டு நிலங்களாகி வருகிறது. ஏற்கனவே விளைச்சல் தராத களிமண் நிலங்கள் 7 பகுதிகளாக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைக்கும் திறன் குறைந்த நிலம் 24 இலட்சம் ஹெக்டார் கரிசல் மண்வகைகளில் சோடியம் அயனி அதிகம் இருப்பதால் அடிமண் இறுகி காணப்படும் நிலங்கள் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 இலட்சம் ஹெக்டார் . செம்மண் நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய கூழ்ம ஆக்சைடுகளால் மண் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேல்மண் இறுகிவிடும் நிலையில் உள்ள பரப்பளவு ஏறத்தாழ 4 இலட்சம் ஹெக்டார் . நெல் சாகுபடியை தொடர்ந்து செய்வதால் மண் தனது திடத் தன்மையை இழந்து வரும் நிலம் ஏறத்தாழ 25,000 ஹெக்டார் . அடிமண்ணில் பாறைகள் தென்பட்டு , மேல்மண் ஆழமற்ற நிலங்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஹெக்டார் .
பருவம் மாறி மலைபெய்தல், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , இப்படி இயற்கையின் கணக்கை ஈடு செய்து வளர்ச்சி காணாது நவீன கம்ப்யூட்டர் யூகங்களாக மாறிவரும் சூழ்நிலை , உழைக்காமல் உடனடியாக பணம் சம்பாதித்து பந்தா வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் , சிந்தனையும் அளவுக்கு மீறி விளைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலை மாற்றி இனி வரவிருக்கும் நூற்றாண்டில் அவரவர் வீட்டில் இருக்கின்ற இடத்திலேயே , சந்து , பொந்து , மொட்டை மாடியில் காய்கறிகள் , கீரைகள் , மற்றும் அனைத்து உணவு , மருத்துவச்செடிகளை வளர்த்து பலனை எடுக்கத் தெரிந்தவரே நிறைவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தகுதியுடைவரா வார். எனவே ஒவ்வொருவரும் தம் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் ,கீரைகள் , பழங்களை , மருத்துவச்செடிகளை வளர்க்கக் கற்றுக் கொள்வோம் .