இவற்றை வளர்க்க 3 இன்ச் முதல் 6 இன்ச் வரை உயரமுள்ள மண்கலவை அமைப்பு தேவை இதற்கு ஒரு பாலிதீன் சீட் அல்லது பழைய சிமெண்ட் சாக்குகள் , அல்லது பழைய பிளக்ஸ் பேனர் ஆகியவற்றை அகலம் 3 அடி வைத்து நீளம் தேவைக்கேற்ப 6 அடி , 10 அடி , அல்லது அதற்குமேல் விரித்து வைத்து அதன் விளம்பு பகுதியில் சுற்றிலும் செங்கல் அல்லது மரச்சட்டம், அல்லது பழைய கடப்பா பீஸ்கற்கள் அல்லது பைப் ஆகியவற்றை 3 இன்ச் முதல் 6 இன்ச் வரை வைத்து அதன் உள்பகுதியில் முன்னரே தயாரித்த மண் கலவையை இடவும்.
பின்னர் மட்டம் செய்து விரலால் கோடுகள் 1/2" இன்ச் ஆழ பள்ளமாக போடவும் 1 சதுர மீட்டருக்கு 1/2 கிராம் விதை அரைக்கீரை , தண்டுக்கீரை விதையை 5 பங்கு ஆற்றுமணலுடன் கலந்து மேற்கண்ட பாத்தியில் விதைக்கவும். பின்னர் விரலால் மட்டம் செய்து தினமும் தண்ணீர்விட்டுவர 3 அல்லது 5 நாட்களில் முளைக்கத் துவங்கும். பின்னர் 1 மாதத்திற்குள் இச்செடி வளந்து பூக்க ஆரம்பிக்கும் முன் கீரையை பறித்து பயன்படுத்தலாம். அதிகம் உற்பத்தி செய்து கீரையை விற்கலாம். காலை அல்லது மாலை கீரை சூப் தயாரித்து விற்பனை செய்யலாம் . மேற்கண்டபடி விதைக்கும் கீரைகளில் நாம் தேவைப்படும்போது அறுத்து பயன்படுத்தலாம். புதினா , பொன்னாங் கன்னி கீரைகளை வாங்கி இலையை சமைக்க எடுத்த பிறகு மீந்த தண்டுகளை 3 இஞ்சுக்கு ஒன்றாக நடவுசெய்து வளர்க்கலாம். இதன்படி என்னென்ன செடிகள் வளர்க்கலாம் என்பதை பின்னர் வரும் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தரையில் படர்ந்து 1/2 அடி முதல் 1 1/2 அடி வரை வளரும் தாவரம்
கீரைகள்
புல்
அழகுச்செடிகள்
மூலிகைச்செடிகள்
2)1 1/2 அடி முதல் 3 அடி வரை வளரும் தாவரங்கள்
இவற்றை வளர்க்க 12 இன்ச் அகலம் , 12 இன்ச் உயரம் மற்றும் 16 இன்ச் அகலம் , 16 இன்ச் உயரம் உள்ள பாலிதீன் பைகள் அல்லது Ld பைகள் , Hm பைகள் , அல்லது 1 அடி அல்லது 1 1/2 அடி உயரமுள்ள மண்தொட்டி, சிமெண்ட் தொட்டி , பழைய கேரிபைகள், அல்லது பழைய பிளக்ஸ் பேனரை பை போல் வடிவமைத்துக் கொள்ளவும். சாக்குப் பைகளையும் பயன்படுத்தலாம். அல்லது மாடியில் கைபிடி சுவர் ஒட்டி மேற்குறிப்பிட்ட உயரத்தின் படி சுற்றினும் சுவர் கட்டி அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்த பைகள் ,சாக்குகள் ,தொட்டிகளில் தரை மட்டத்தில் வைக்கும்போது 1/2 இன்ச் உயரத்தில் சுற்றிலும் அதிகபட்சமாக 8 ஓட்டைகள் , குறைந்தபட்சம் நான்கு ஓட்டைகளாவது இருக்க வேண்டும். அப்போது தான் பையினுள் நீர் தேங்காமல் வெளியே வாய்ப்புண்டு . நீர் தேங்கி நின்றால் செடிகள் அழுகிவிடும் .
இம்முறையில் வளர்க்க வேண்டிய தாவர வகைகளின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்வோம் .
குறிப்பாக காய்கறிகளில் இரண்டு வகையில் அதாவது .
1). விதைத்த பின் முளைத்து வளரும் இடத்திலேயே காய் , கனி தந்து வளரவிடுவது .
2). விதைத்து முளைத்து பின் சற்று வளர்ந்த பின் அச் செடிகளை பிடுங்கி வேறிடத்தில் நட்டு வளர்த்து காய் , கனி பெறுவது .
மேற்கண்டபடி வெண்டை , கொத்தவரை , முதலிய செடி வகை காய்கறி விதைகளை நேரடியாக விதைக்கலாம். தக்காளி ,மிளகாய் , கத்தரி ஆகியவற்றை தரையில் படர்ந்து 1/2 அடிமுதல் 1 1/2 அடி வரை வளரும் தாவரங்களுக்கு தயாரித்த பாத்திகளில் விதைத்து சற்று வளர்ந்ததும் அவற்றை வேருடன் பிடுங்கி மேற்குறிப்பிட்ட அளவுப்படி அமைந்த பைகளில் மாடிக்கேற்ற மணல் கலவையை நிரப்பி ஒன்றிரண்டு செடிகளை மட்டுமே ஊன்றி வளர்க்க வேண்டும். அப்போது தான் வளர்ந்து பயன் பெரும்.
நேரடியாக விதைத்து வளரச்செய்யும் விதைகளை பையில் விதைக்கும் போது மண்கலவையின் மேல்பகுதி சற்றே மூடும்படி நடவு செய்தால் போதுமானது. அப்போதுதான் விதைகள் விரைவில் வளர்ந்து வரும்.
விதைகளை ஆழத்தில் நடவு செய்தால் முளைக்காமல் போய்விடும் , அல்லது முளைத்து மண்ணை முட்டி வெளியே வரமுடியாமல் அழுகிவிடும்.
ஒருபையில் எத்தனை செடிகள் முளைத்து வந்தாலும் ஓன்று அல்லது இரண்டு செடிக்கு மேல் இருக்கக் கூடாது. மற்ற செடிகளை களைந்து விடவும் , அல்லது அதை பிடுங்கி இன்னும் வேறு பைகளில் நடவு செய்யவும். இவ்வாறு வளர்க்கும் செடிகளை , செடிகள் வளரும் உயர்த்திற்கேற்ப மாடியில் 3 அல்லது நான்கு அடுக்கு முறையிலும் வளர்க்கலாம்.
இம்முறைகளில் வளர்க்கக் கூடிய தாவரங்களின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .
1 1/2 அடிமுதல் 3 அடிவரை வளர்ந்து பலன் தருபவை
கீரைகள்
காய்கறிகள்
பூச்செடிகள்
அழகுச்செடிகள்
பயிறுவகைகள்
3). 3 அடி முதல் 9 அடி வரை வளரும் தாவரங்கள்
இத்தகைய செடிகள் வளர்க்க 2 அடி அகலம் , 2 அடி நீளம் , 2 அடி உயரமுள்ள பெரிய உரச்சாக்குப்பைகள், பழைய அண்டா , பிளாஸ்டிக் ட்ரம், பழைய சின்டெக்ஸ் டேங் , சிமெண்ட் தொட்டிகள் தேவைப்படும் இதிலும் தரைக்கு மேல் 1/2 இன்ச் உயரத்தில் சுற்றிலும் அதிகபட்சமாக 8 ஓட்டைகள் இருக்க வேண்டும். இந்த அமைப்பின் உள் ஓட்டைகள் சற்று அடைத்தவாரு உடைந்த ஓடுகள், மண் தொட்டியின் உடைந்த பாகங்கள் , கற்கள் ஆகியவற்றை வைத்து மேலாக 2" இன்ச் பரப்பளவிற்கு ஆற்றுமணல் மட்டும் கொட்டி அதன் மேல் மாடிக்கேற்ற உரக்கலவைகளை இட்டு நிரப்பி தேவையான செடிகளை நடவு செய்து வளர்க்கலாம் .
இவ்வாறான அமைப்பின் மூலம் நடவு செய்து வளர்க்கத் தேவையான செடிவகைகளை பின்வரும் பட்டியல் மூலமாக தெரிந்து கொள்ளலாம் .
கீரைகள்
அழகுச்செடிகள்
வாசனைச் செடி
பாம் வகை
1. ரேபீஸ் பாம்
2. பவுண்டன் பாம்
3. அரிக்கா பாம்
4. பாட்டில் பாம்
5. பின்னால் பாம்
6. தண்ணீர் பனை
மூலிகைச் செடிகள்
4). 9 அடிமுதல் சுமார் 18 அடி வரை வளரும் தாவரங்கள்
இத்தகைய செடிகளை வளர்க்க குறைந்த வயதிலேயே பலன் தரக் கூடிய ஒட்டுக் கன்றுகளை பயன்படுத்துவது சிறந்த பலனைத்தரும் . இதற்கு 3 அடி அகலம் , 3 அடி நீளம் , 3 அடி உயரமுள்ள சதுர தொட்டிகள் அல்லது வட்டத் தொட்டிகள் , சிமெண்ட் கான்கிரீட்டால் ஆனவை . அல்லது பிளாஸ்டிக் ட்ரம், பாலிதீன் சீட்டுகள் , மரச்சட்டத்தின் உள் பாலிதீன் பை அமைந்த அமைப்புகள் ஆகியனவற்றில் மாடிக்கேற்ற கலவை இட்டு நிரப்பி தேவையான செடிகளை நட்டு வளர்க்கலாம் . அதிக காற்றினால் செடிகள் பாதிப்படையாதவாறு வளர்ந்த செடிகளை கயிறுவைத்து கட்டுவதற்கு ஏதுவாகபந்தல் கிளாம்ப் அமைக்க வேண்டும் . போதுமான உயரத்திற்கு மேல் வளராதவாறு நுனி கிளைகளை பலன் தந்த பின்பு வெட்டிவிட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறான அமைப்பில் வளர்க்கக்கூடிய செடிகளை பின்வரும் பட்டியல் மூலம் அறியலாம் .
9 அடிமுதல் சுமார் 18 அடிவரை வளரும் தாவரங்கள்
பழங்கள்
மலர்மரங்கள்
இலைஅழகுமரம்
மூலிகைகள்
பின்னர் மட்டம் செய்து விரலால் கோடுகள் 1/2" இன்ச் ஆழ பள்ளமாக போடவும் 1 சதுர மீட்டருக்கு 1/2 கிராம் விதை அரைக்கீரை , தண்டுக்கீரை விதையை 5 பங்கு ஆற்றுமணலுடன் கலந்து மேற்கண்ட பாத்தியில் விதைக்கவும். பின்னர் விரலால் மட்டம் செய்து தினமும் தண்ணீர்விட்டுவர 3 அல்லது 5 நாட்களில் முளைக்கத் துவங்கும். பின்னர் 1 மாதத்திற்குள் இச்செடி வளந்து பூக்க ஆரம்பிக்கும் முன் கீரையை பறித்து பயன்படுத்தலாம். அதிகம் உற்பத்தி செய்து கீரையை விற்கலாம். காலை அல்லது மாலை கீரை சூப் தயாரித்து விற்பனை செய்யலாம் . மேற்கண்டபடி விதைக்கும் கீரைகளில் நாம் தேவைப்படும்போது அறுத்து பயன்படுத்தலாம். புதினா , பொன்னாங் கன்னி கீரைகளை வாங்கி இலையை சமைக்க எடுத்த பிறகு மீந்த தண்டுகளை 3 இஞ்சுக்கு ஒன்றாக நடவுசெய்து வளர்க்கலாம். இதன்படி என்னென்ன செடிகள் வளர்க்கலாம் என்பதை பின்னர் வரும் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தரையில் படர்ந்து 1/2 அடி முதல் 1 1/2 அடி வரை வளரும் தாவரம்
கீரைகள்
- தண்டு
- அரைக்கீரை
- புதினா
- பொன்னாங்கன்னி
- வெங்காயத்தாழ்
- பாலக்கீரை
புல்
- கொரியின்
- மெக்சிகன்
- ஜி உகிராஸ்
- கார்பெட்
- எருமைபுல்
அழகுச்செடிகள்
- டேபிள்ரோஸ்
- போர்டுலாகா
- பெட்டூனியா
- பால்சம்
- ஹெடுகிராபிஸ்
- டிரடிஷ் கேன்டியா
- ஜயரினா பென்டுலா
- சென்டுமல்லி
- மாலைபச்சை
- மனிபிளானட்
மூலிகைச்செடிகள்
- கீழாநெல்லி
- வல்லாரை
- கரிசலாங்கண்ணி
- கொத்தமல்லி
- வெந்தயக்கீரை
- பொடுதலை
- புளியாரை
- அம்மன்பச்சரிசி
- கானாம்கீரை
- கண்டங்கத்தரி
- வெள்ளருகு
- இசப்கல்
2)1 1/2 அடி முதல் 3 அடி வரை வளரும் தாவரங்கள்
இவற்றை வளர்க்க 12 இன்ச் அகலம் , 12 இன்ச் உயரம் மற்றும் 16 இன்ச் அகலம் , 16 இன்ச் உயரம் உள்ள பாலிதீன் பைகள் அல்லது Ld பைகள் , Hm பைகள் , அல்லது 1 அடி அல்லது 1 1/2 அடி உயரமுள்ள மண்தொட்டி, சிமெண்ட் தொட்டி , பழைய கேரிபைகள், அல்லது பழைய பிளக்ஸ் பேனரை பை போல் வடிவமைத்துக் கொள்ளவும். சாக்குப் பைகளையும் பயன்படுத்தலாம். அல்லது மாடியில் கைபிடி சுவர் ஒட்டி மேற்குறிப்பிட்ட உயரத்தின் படி சுற்றினும் சுவர் கட்டி அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்த பைகள் ,சாக்குகள் ,தொட்டிகளில் தரை மட்டத்தில் வைக்கும்போது 1/2 இன்ச் உயரத்தில் சுற்றிலும் அதிகபட்சமாக 8 ஓட்டைகள் , குறைந்தபட்சம் நான்கு ஓட்டைகளாவது இருக்க வேண்டும். அப்போது தான் பையினுள் நீர் தேங்காமல் வெளியே வாய்ப்புண்டு . நீர் தேங்கி நின்றால் செடிகள் அழுகிவிடும் .
இம்முறையில் வளர்க்க வேண்டிய தாவர வகைகளின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்வோம் .
குறிப்பாக காய்கறிகளில் இரண்டு வகையில் அதாவது .
1). விதைத்த பின் முளைத்து வளரும் இடத்திலேயே காய் , கனி தந்து வளரவிடுவது .
2). விதைத்து முளைத்து பின் சற்று வளர்ந்த பின் அச் செடிகளை பிடுங்கி வேறிடத்தில் நட்டு வளர்த்து காய் , கனி பெறுவது .
மேற்கண்டபடி வெண்டை , கொத்தவரை , முதலிய செடி வகை காய்கறி விதைகளை நேரடியாக விதைக்கலாம். தக்காளி ,மிளகாய் , கத்தரி ஆகியவற்றை தரையில் படர்ந்து 1/2 அடிமுதல் 1 1/2 அடி வரை வளரும் தாவரங்களுக்கு தயாரித்த பாத்திகளில் விதைத்து சற்று வளர்ந்ததும் அவற்றை வேருடன் பிடுங்கி மேற்குறிப்பிட்ட அளவுப்படி அமைந்த பைகளில் மாடிக்கேற்ற மணல் கலவையை நிரப்பி ஒன்றிரண்டு செடிகளை மட்டுமே ஊன்றி வளர்க்க வேண்டும். அப்போது தான் வளர்ந்து பயன் பெரும்.
நேரடியாக விதைத்து வளரச்செய்யும் விதைகளை பையில் விதைக்கும் போது மண்கலவையின் மேல்பகுதி சற்றே மூடும்படி நடவு செய்தால் போதுமானது. அப்போதுதான் விதைகள் விரைவில் வளர்ந்து வரும்.
விதைகளை ஆழத்தில் நடவு செய்தால் முளைக்காமல் போய்விடும் , அல்லது முளைத்து மண்ணை முட்டி வெளியே வரமுடியாமல் அழுகிவிடும்.
ஒருபையில் எத்தனை செடிகள் முளைத்து வந்தாலும் ஓன்று அல்லது இரண்டு செடிக்கு மேல் இருக்கக் கூடாது. மற்ற செடிகளை களைந்து விடவும் , அல்லது அதை பிடுங்கி இன்னும் வேறு பைகளில் நடவு செய்யவும். இவ்வாறு வளர்க்கும் செடிகளை , செடிகள் வளரும் உயர்த்திற்கேற்ப மாடியில் 3 அல்லது நான்கு அடுக்கு முறையிலும் வளர்க்கலாம்.
இம்முறைகளில் வளர்க்கக் கூடிய தாவரங்களின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .
1 1/2 அடிமுதல் 3 அடிவரை வளர்ந்து பலன் தருபவை
கீரைகள்
- புளிச்சைகீரை
- பிரண்டை
- மனத்தக்காளி
- தூதுவளை
காய்கறிகள்
- வெண்டை
- கொத்தவரை
- தக்காளி
- மிளகாய்
- கத்தரி
- முட்டைகோஸ்
- காலிபிளவர்
பூச்செடிகள்
- மல்லிகை
- கனகாம்பரம்
- ரோஸ்
- லென்டனா
- ரசலியா
- மினி இட்லிபூ
- மினி நந்தியா வட்டம்
- சாமந்தி
- கோல்டன் ராடு
- ஹெலி கிரைசம்
- கோரியாப்சிஸ்
- செம்பருத்தி
அழகுச்செடிகள்
- மினி அக்காரிடா
- அஸ் பெராகஷ்
- டுரான்டா
- செங்கீரை
- பனைவகை
- டேபிள் பாம்
- மூலிகைச்செடிகள்
- சோற்றுக் காற்றாலை
- கற்பூரவள்ளி
- உளமத்தை
- லா வென்டா
- ரோஸ்மேரி
- லெமன் கிராஷ்
- தட்டைப் பயறு
- சீர் பச்சிலை
- துளசி
- திருநீற்று பச்சிலை
- வெட்டிவேர்
- இன்சுலின்
பயிறுவகைகள்
- உளுந்து
- பாசிப்பயறு
- மொச்சை
- பீன்ஸ்
- கெண்டை கடலை
- சோயாபீன்ஸ்
- நிலக் கடலை
- எள்
3). 3 அடி முதல் 9 அடி வரை வளரும் தாவரங்கள்
இத்தகைய செடிகள் வளர்க்க 2 அடி அகலம் , 2 அடி நீளம் , 2 அடி உயரமுள்ள பெரிய உரச்சாக்குப்பைகள், பழைய அண்டா , பிளாஸ்டிக் ட்ரம், பழைய சின்டெக்ஸ் டேங் , சிமெண்ட் தொட்டிகள் தேவைப்படும் இதிலும் தரைக்கு மேல் 1/2 இன்ச் உயரத்தில் சுற்றிலும் அதிகபட்சமாக 8 ஓட்டைகள் இருக்க வேண்டும். இந்த அமைப்பின் உள் ஓட்டைகள் சற்று அடைத்தவாரு உடைந்த ஓடுகள், மண் தொட்டியின் உடைந்த பாகங்கள் , கற்கள் ஆகியவற்றை வைத்து மேலாக 2" இன்ச் பரப்பளவிற்கு ஆற்றுமணல் மட்டும் கொட்டி அதன் மேல் மாடிக்கேற்ற உரக்கலவைகளை இட்டு நிரப்பி தேவையான செடிகளை நடவு செய்து வளர்க்கலாம் .
இவ்வாறான அமைப்பின் மூலம் நடவு செய்து வளர்க்கத் தேவையான செடிவகைகளை பின்வரும் பட்டியல் மூலமாக தெரிந்து கொள்ளலாம் .
கீரைகள்
- அகத்தி
- முருங்கை
- கல்யாணமுருங்கை
- தவசிக்கீரை
- நச்சுக் கொட்டைகீரை
- கருவேப்பிலை
- காய்கறிகள்
- சுண்டக்காய்
- கறிப்பலா
- ஏலக்காய்
- பப்பாளி
- பழங்கள்
- கொய்யா
- மாதுளை
- சீத்தா
- ஸ்டார் புரூட்
- தக்காளி
- இலந்தை
- கரும்பு
- எலுமிச்சை
அழகுச்செடிகள்
- பவளமல்லி
- இட்லிபூ
- நந்தியா வட்டம்
- பாரி சாதம்
- அரளி
- ஹெலி கோனியா
- கேனா
- யூக்கா
- மயில்கொன்றை
- முசான்டா
- குரோட்டன்ஸ்
- ஓராந்திமம்
- கிராப்டோ பில்லம்
- ட்ரசீனா
- அக்காரிய
- டிசம்பர் பூ
- பவுடர் பூ
வாசனைச் செடி
- நைட் குயின்
- டேகுயின்
- மருதாணி
- மகிழம்பூ
- கிராம்பு
- பாமரோசா
- சிட்ரனெல்லா
- தாழம்பூ
பாம் வகை
1. ரேபீஸ் பாம்
2. பவுண்டன் பாம்
3. அரிக்கா பாம்
4. பாட்டில் பாம்
5. பின்னால் பாம்
6. தண்ணீர் பனை
மூலிகைச் செடிகள்
- ஆடா தொடா
- பெரியா நங்கை
- பிரியாணி இலை
- நொச்சி
- வில்வம்
- வன்னி
- நோனி
- வெள்ளை எருக்கு
- கொடிக்கள்ளி
- சீமை அகத்தி
- அவுரி
- மருந்துக் கத்தரி
- அனேட்டா (லிப்ஸ்டிக் மரம் )
4). 9 அடிமுதல் சுமார் 18 அடி வரை வளரும் தாவரங்கள்
இத்தகைய செடிகளை வளர்க்க குறைந்த வயதிலேயே பலன் தரக் கூடிய ஒட்டுக் கன்றுகளை பயன்படுத்துவது சிறந்த பலனைத்தரும் . இதற்கு 3 அடி அகலம் , 3 அடி நீளம் , 3 அடி உயரமுள்ள சதுர தொட்டிகள் அல்லது வட்டத் தொட்டிகள் , சிமெண்ட் கான்கிரீட்டால் ஆனவை . அல்லது பிளாஸ்டிக் ட்ரம், பாலிதீன் சீட்டுகள் , மரச்சட்டத்தின் உள் பாலிதீன் பை அமைந்த அமைப்புகள் ஆகியனவற்றில் மாடிக்கேற்ற கலவை இட்டு நிரப்பி தேவையான செடிகளை நட்டு வளர்க்கலாம் . அதிக காற்றினால் செடிகள் பாதிப்படையாதவாறு வளர்ந்த செடிகளை கயிறுவைத்து கட்டுவதற்கு ஏதுவாகபந்தல் கிளாம்ப் அமைக்க வேண்டும் . போதுமான உயரத்திற்கு மேல் வளராதவாறு நுனி கிளைகளை பலன் தந்த பின்பு வெட்டிவிட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறான அமைப்பில் வளர்க்கக்கூடிய செடிகளை பின்வரும் பட்டியல் மூலம் அறியலாம் .
9 அடிமுதல் சுமார் 18 அடிவரை வளரும் தாவரங்கள்
பழங்கள்
- சப்போட்டோ
- மா
- பெருநெல்லி
- அரிநெல்லி
- சாத்துக்குடி
- நார்த்தை
- பப்ளிமாஸ்
- ஆப்பிள்
- வென்னைப்பலம்
- வாழை
- முந்திரி
மலர்மரங்கள்
- மந்தாரை
- பிக்னோனியா
- அஸ்ஸ்டோனியா
- பொரசமரம்
- பூவரசு
- பாட்டில்பிரெஸ்மரம்
- சரக்கொன்றை
- ஜெகரண்டா
- பூமருது
- புளூமேரியா
இலைஅழகுமரம்
- கிறிஸ்மஸ்மரம்
- தூஜா
- பெரனிமரம்
- டிவி டிவி
- சப்பர்
- சவுக்கு
- சில்வர் ஒக்
- புன்னை
- மலைஅத்தி
- பாக்கு
- மூங்கில்
மூலிகைகள்
- அதிமரம்
- பதிமரம்
- தான்றி